கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு உதவும் வகையில்
தானமாக வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்தியசீலன்(61) என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நினைவு திரும்பாமல் மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.