புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

தமிழகத்தில் இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு தானம்

கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு உதவும் வகையில்
தானமாக வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்தியசீலன்(61) என்பவர் சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நினைவு திரும்பாமல் மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையறிந்து, சோகத்தில் உறைந்துப்போன சத்தியசீலனின் உறவினர்கள், நன்றாக இயங்கும் நிலையில் உள்ள அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்க தீர்மானித்தனர். இதையடுத்து, சத்தியசீலனின் ஈரல் இங்குள்ள ஜெம் மருத்துவமனைக்கும் இரு விழிகள் அரவிந்த் ஆஸ்பத்திரிக்கும், தோல் பகுதி கங்கா மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.தமிழகத்தில் இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு தானம்

ad

ad