இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் கூட்டிணைவால் நாட்டில் முதல்தடவையாக இணக்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.