யாழ் மாநகர சபையின் வீதிச் சுத்திகரிப்புப் பணிகளில் தற்பொழுது பெக்கோ பொறிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாவாந்துறையிலிருந்து வட்டுக்கோட்டை செல்லும் பிரதான வீதியின் இருமரு ங்கிலும் காணப்படும் குப்பைகள், புற்கள் போன்றவற்றை அகற்றும் பணிகளில் மாநகர சுத்திகரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணியினை வேகமாகவும் சீராகவும் செய்விப்பதற்காக உயர்தர பெக்கோ பொறிகளை ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் இச்சுத்திகரிப்பு வேலைகள் விரைவில் பூர்த்தியாக்கப்படுமென ஊழிய ர்கள் தெரிவித்துள்ளனர்.