புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

கிளி கனகாம்பிகை ஆலய சூழலில் பௌத்த விகாரை : கலந்துரையாடலுக்கு அழைப்பு

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்த சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக அதனை மாற்றும் நோக்கில் அவசர வேலைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந் நிலையில் மேற்படி அத்துமீறிய பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிராக பொது மக்களது நடவடிக்கை தொடர்பான அவசர கலந்துரையாடல் ஓன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 13.8.2016 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வசந்திவாசா, ஏ9 வீதி, பரவிப்பாஞ்சான் எனும் இடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

எனவே இவ் கலந்துரையாடலில் பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad