புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2016

வவுனியாவில் கோர விபத்து:2மாணவிகள் படுகாயம்

சற்றுமுன் வவுனியா வைரவர்புளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த
வவுனியா குட்செட்வீதியை சேர்ந்த சைவப்பிரகாசா கல்லூரியில் 2017 வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் விதுர்சினி மற்றும் கஜி ஆகிய இரண்டு மாணவிகள் மீது மோதியதில் இரண்டு மாணவிகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்ததாகவும் மூவரும் மது போதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் கூறுகிறார்கள் இதேவேளை முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் ஒருநபர் தப்பித்து ஓடியுள்ளதுடன் ஒருவர் அகப்பட்டுள்ளார் அகப்பட்ட நபரே முச்சக்கர வண்டியின் உரிமையாளர் ஆகும் முச்சக்கர வண்டியுனுள் மது போத்தல்களும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


ad

ad