புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

தமிழக உணர்வை வெளிப்படுத்துங்க...: நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியேறிய நடிகர்

சகோதரிகள் லலிதாகுமாரி, டிஸ்கோசாந்தியுடன் அருண்மொழி வர்மன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கூடியது. இதில் கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை டிஸ்கோ சாந்தியின் தம்பியும், நடிகருமான அருண்மொழி வர்மன் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கடிதத்தினை கொடுத்தார். 

அப்போது அவர், சென்னையில் 18ஆம் தேதி  செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் போட்டி நடக்கிறது. இதில் கன்னட நடிகர்களும் கலந்து கொள்கின்றனர். தற்போது காவிரி பிரச்சனைக்காக தமிழக விவசாயிகள் போராடும் நிலையில் அவர்கள் இங்கு வந்தால் பிரச்சனை வரலாம். நமக்கும் உணர்வு இல்லை என்று சொல்லுவார்கள். ஆகையால் இந்த போட்டியை தள்ளி வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையை விட இந்த போட்டி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது என கூறியுள்ளார். 

அதற்கு சங்க நிர்வாகிகள், நாம் என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். என்ன சொல்றீங்க, தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தமிழர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளனர். உணர்வு பூர்வமாக நாம் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார் அருண்மொழி வர்மன். 


ad

ad