புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது!'- நர்ஸின் உயிரை பறித்த ஒருதலைக்காதல்

ஒருதலை காதலால் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கடலூர்
மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்துள்ளது. காதலிக்க தொடர்ந்து வற்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் புஷ்பலதா (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலைப்பார்த்து வந்த புஷ்பலதா, தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்ற இளைஞர், புஷ்பலதாவை ஒருதலையாக காதலித்துள்ளார். தினமும் புஷ்பலதாவை பின் தொடர்ந்து சென்ற தனசேகர், தனது காதலை அவரிடம் கூறியுள்ளார். ஆனால், காதலை ஏற்றுக் கொள்ள புஷ்பலதா மறுத்துவிட்டார். தொடர்ந்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார் தனசேகர்.
இந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி வேலை முடிந்து புஷ்பலதா சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பூதாமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே தனசேகர், புஷ்பலதாவை வழிமறித்ததோடு, தன்னை காதலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனை மறுத்த புஷ்பலதாவை, தகாத வார்த்தையால் திட்டியதோடு, என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று கூறி சுடிதாரை பிடித்து இழுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த புஷ்பலதா, வீட்டில் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த புஷ்பலதா 9 நாட்கள் கழித்து நேற்றிரவு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

ad

ad