புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2016

டி.வி. நிகழ்ச்சியால் நாகப்பன் தற்கொலை….லட்சுமி ராமகிருஷ்ணன் புது விளக்கம்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒருங்கிணைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி அவதூறாக ஒளிபரப்பியதால் அவமானமடைந்த நாகப்பன் என்பவர், அண்மையில் தற்கொலை செய்ததாக, தகவல் வெளியானது. நாகப்பனின் மகள் ராதிகா, இது குறித்து போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.
இந் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது,
புகார் கொடுத்த ராதிகா, அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனை அவரது மனவி அம்பிகா, மகள் ரேணுகா ஆகியோர்தான் அதிகமாக, அசிங்கமாக திட்டினார்கள்.
வீட்டில் இரண்டு மகள்களுக்கு செக்ஸ் தொந்தவு கொடுத்தார் என்று அவரது குடும்பத்தினர்தான் சொன்னார்கள்.
எங்களுடைய டூயூட்டி போலீசுக்கு தகவல் கொடுப்பதும், குழந்தைகள் அமைப்பிடம் சொல்வதும் தான். நான் இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றார்.

ad

ad