புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2016


சைதை துரைசாமிக்கு ஒரு பெருமை உண்டு. சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க மேயர் அவர்தான்.
5 ஆண்டு காலம் இந்த ஒரு பெருமையுடன் பதவியில் இருந்தவரால் சென்னை மாநகரத்திற்கு ஏதாவது பெருமை உண்டா என்றால் உதட்டைப் பிதுக்குகிறார்கள் சொந்தக் கட்சியின் கவுன்சிலர்களே! மேயரின் செயல்பாடு அப்படிப்பட்டது.


பேச்சு பேச்சாத்தான் இருக்கும்

மாநகராட்சியின் கடைசிக்கூட்டத்தை 3 நாட்கள் நடத்திய மேயர், அதில் பெரும்பாலான நேரம் அவரே பேசினார். ஜெ. புகழ் பாடினார். கடந்த 5 ஆண்டுகளில் 40% நேரத்தை அவரே எடுத்துக் கொண்டு, 150 கவுன்சிலர் களுக்கும் மொத்தமாக மிச்ச நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தவர் சைதை என்கிறார்கள் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும். 2011-ல் மேயரானபோது முன்னாள் மேயர்களான  தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின், மா.சுப்ரமணியன் இருவரும் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி இழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியதையே கடைசிக் கூட்டம் வரை பேசிக் கொண்டிருந்தார் இன்றைய மேயர்.
 இதுகுறித்து நம்மிடம் பேசிய மா.சுப்ரமணியன், ""நான் மேயராக இருந்த காலத்தில், பண பலமும் அரசியல் வலிமையும் மிக்க  தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 4000 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடங்களை அதிரடியாக மீட்டேன். அதை பாதுகாக்கக் கூட திராணியில்லாமல் இவர் தாரை வார்த்திருக்கிறார். கிண்டியிலுள்ள பிரமாண்டமான ஐடிசி சோழா ஹோட்டல் வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 கிரவுண்ட் ஓ.எஸ்.ஆர். நிலத்தை நாங்கள் மீட்க, அதனை இவர் ஹோட்டல் நிர்வாகத்திடமே ஒப்படைத்து விட்டார். எங்கள் நிர்வாகத்தில் ஆட்சியில் 25-க்கும் மேற்பட்ட பாலங்கள், மேம் பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டன. அவர்கள் ஆட்சியில் 10 பாலம் கட்டுவதாக அறி வித்து ஒரு பாலத்தைக் கூட கட்டாமல், பணத் தைக் கொள்ளையடித்ததுதான் நடந்தது. எங்கள் மீது குற்றம்சாட்டிய அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். எங்களை குற்றவாளின்னு நிரூபிக்க முயற்சிக்காமல், "மேயர் மீது வழக்குத் தொடர அனுமதி வாங்கணும்'னு சொத்தையான காரணத்தைச்சொல்லி புற வாசல் வழியாக ஓடிப் போனார்  துரைசாமி'' என்கிறார் ஆவேசமாக.
 

குப்பைமேடான சென்னை  

""சென்னையைத் தூய்மையாக்குவேன் என்பது சைதை துரைசாமியின் முதல் வாக்குறுதி. அதைக்கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மாநகராட்சியின் 9, 10, 13 ஆகிய 3 மண்டலங்களி லும் குவியும் குப்பைகளை அள்ளி கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக்கிடங்குகளில் கொட்டும் காண்ட்ராக்ட்டை ராம்கி என்கிற தனியார் நிறுவனத்திடம் கொடுத்தது மாநக ராட்சி நிர்வாகம். குப்பை அள்ளுவதாகக் கணக்கு காட்டி, தினமும் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடக்கிறது. அதுவே  ஒரு மாசத்துக்கு 1 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். அந்த வகையில் கடந்த 5 வருடத்தில் 3 மண்டலங்களை யும் சேர்த்தால் சுமார் 200 கோடி ரூபாய் முறை கேடுகள் நடந்துள்ளன என்றும் புகார்கள் தந்தும் நடவடிக்கை இல்லை'' என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.
கொடுங்கையூர் கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கிறது குப்பை. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் அப்பகுதியிலுள்ள மக்களை பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. மாசு கட்டுப் பாட்டு வாரியம் எச்சரித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக மக்கள் தொடுத்த வழக்கின் விசா ரணை சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, மாநகராட்சி ஆணையரை, குப்பை கொட்டும் இடத்தில் குடிசை போட்டுக்கொடுத்து குடியிருக் கச் சொல்ல வேண்டும். அல்லது அங்கே ஒரு நாற் காலி போட்டு 24 மணிநேரம் உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டங்கள் புரியும். அவரால் 24 மணி நேரம் இருக்க முடியுமா? அவர் விரும்பினால் நாங்களே வீடு கட்டித்தரு கிறோம் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலும் நீதிபதி மகாதேவனும் மிக கடுமையாக கண்டித்தனர்.

கொசுக்கடியும் கொசுவலை ஊழலும் 

""365 நாட்களும் கொசுக்கடியால் அவஸ்தைப் படுகிறார்கள் சென்னைவாசிகள். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் உள்பட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் சென்னையை சுற்றி ஓடுகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களின் பராமரிப்பிற்காக மத்தியஅரசின் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ்  ஒதுக்கப்பட்ட 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் திட்டம் மட்டும் முடங்கி விட்டது. இதனால் இந்த நீர்வழித்தடங்களில் கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் பரவுகின்றன. ""இவற்றை மூடி மறைத்து மர்மக் காய்ச்சல் என சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது'' என்கிறார் சென்னை மாநகர சமூக சேவகர் மணி.
மேலும் இவர், ""கொசுக்களைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷார் காலத் தில், கூவம் ஆற்றில் 20 அடி அகலத்துக்கு  6 ஊழியர்கள் நின்று கொண்டு கொசு மருந்து அடிப்பார்கள். இப்போ, 80 அடி அகலத்துக்கு வெறும் 2 பேர் மருந்து அடிக் கிறார்கள். மருந்தும் தரமாக இல்லை. கொசுக்கடியிலிருந்து தப்பிக்க 5 லட்சம் குடும்பத்தினருக்கு கொசு வலையும்,  கொசுக்களை ஒழிக்க ஐந்தரை லட்சம் நொச்சிச்செடியும், ஆறரை லட்சம்  பப்பாளிச் செடியும்  வழங்கப்படும்னு அறிவிச்சார் மேயர்.  2013-ல் அடையாளமாக 4 பேருக்கு முதல்வர் கையால் கொசுவலை கொடுத்தார்கள்.  முதல் கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் 78 ஆயிரத்து 184 கொசு வலைகள் வாங்கப்பட்டிருப்பதாக கணக்குகள் காட்டப் படுகின்றன. மக்களுக்கு கொசுவலை போய்ச் சேரவில்லை. மாநகராட்சியில் அறிவித்த எந்தத் திட்டமும் முழுசா நிறைவேறலை. எல்லாமே ஊழல் மயம்தான்'' என்கிறார் சமூக சேவகர் மணி.  



கடன் சுமையும் காண்ட்ராக்டர்களும்

கடந்த 5 வருடங்களாக நிதி நெருக்கடியிலேயே மாநகராட்சி நகர்ந்து வந்திருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக உலக வங்கி மற்றும் ஜப்பான், ஜெர்மன் வங்கிகளிடமிருந்தும் பல்வேறு நிதி நிறு வனங்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளது மாநகராட்சி நிர் வாகம். இதனால் மாநகராட்சியின் கடன் சுமை ரூ.3000 கோடிக்கும் அதிகமாக வளர்ந்து நிற்கிறது. காண்ட்ராக்டர்களுக்கு 600 கோடி ரூபாய் பாக்கி உள்ள நிலையில்,  எந்தக் கட்டமைப்பு வசதியும் தரமானதாக இல்லை.  25 சதவீத மேலிட கமிஷனை முன்கூட்டியே தரும் காண்ட்ராக்டர்களுக்கு மட்டுமே டெண்டர் செட்யூல்டு தரப்பட்டன. இது போக மேலிருந்து கீழ்மட்டம் வரையிலான அதி காரிகளுக்கு 25% போய்விடும். கட்டுப்படியாக வில்லை என பல காண்ட்ராக்டர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.  5 ஆண்டுகளில் மேயரும் ஆளும் கட்சி கவுன்சிலர்களுமே வளமடைந்தனர். தன் னையே ஏமாற்றிய இவர்களை நம்பி மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதால்தான் ஆட்சியாளர்களுக்கு தோதான ஐ.ஏ.எஸ் அதிகாரியான கார்த்திகேயனை கமிஷனராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. 

ad

ad