புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2016

உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான்

உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் மாணவிகள் மீதான தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் இன்றைய தினம் மல்லாகம்
நீதிவானை சென்று சந்தித்த நிலையில் அந்த மாணவிகளை பாடசாலைக்கு செல்லுமாறு நீதவான் அறிவுறுத்தி அனுப்பினார்.

எனினும், குறித்த மாணவிகள் மீளவும் பாடசாலைக்கு வந்து பாடசாலை வளாகத்தினுள் செல்ல முயற்சித்த வேளை அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது வாயில் கதவை சாத்தியதால் அங்கு பெரும் களேபரம் இடம்பெற்றது.

இந்தநிலையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரிக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் நேரடியாக வருகை தந்து மாணவிகளை பாடசாலைக்கு அழைத்து சென்று கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றார்.பாடசாலைக்கு வெளியில் மாணவர்களின் பெற்றோர்பெருமளவில் உள்ளதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.  



ad

ad