புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2016

டிஎன்பிஎல்: அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ்

tnpl
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 10 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்தது சூப்பர் கில்லீஸ்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கோபிநாத் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார். சத்யமூர்த்தி சரவணன் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். திருவள்ளூர் தரப்பில் லட்சுமி நாராயணன் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் குவித்தார்.
சூப்பர் கில்லீஸ் தரப்பில் முகுந்தன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ad

ad