புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

கழுவும் மீனில் நழுவும் மீனாக ரஜினி..!! வாய் மூடி மவுனிப்பது ஏன்..?

தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது
எல்லாம் தமிழ்நாட்டில். பொண்ணு கட்டியதும் தமிழ்நாட்டில். ஆனால், தமிழநாட்டுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் வாய் திறந்தது இல்லை.
தமிழ்நாட்டுக்காக குரல் கொடுத்ததும் இல்லை. அவர் வாய் திறந்தது சைக்கிள் சின்னம் அறிமுகப்படுத்திய மூப்பனார் ஐயாவுக்கு மட்டுமே. தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்ற கோஷம்.
இது வரை தமிழகத்தில் ஒரு தொழில் தொடங்கியது கிடையாது. தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்கள் அவருக்காக உயிரைவிடவும் தயாராக இருப்பவர்கள். அவர்களுக்காக ரஜினி செய்தது என்ன?
இன்று தமிழகத்தில் தமிழர்-கன்னடியர் பிரச்னை தலை தூக்கி கிடக்கிறது. கன்னட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தாரா? அடிபடும் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரா?ஒன்றும் இல்லை. அவர் தமிழருக்காக எதுவும் செய்ததில்லை என்று தமிழ் நாட்டு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொதித்துள்ளனர்.

ad

ad