ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் நாளை ஜெனீ வாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற
காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
பலவந்தமாக காணாமல் போகச் செய்வதைத் தடுப்பதற்கான ஐ.நா வின் நடவடிக்கைக்குழு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை அடுத்து தயாரித்த அறிக்கையும் இதன்போது விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
.இந்த அறிக்கை தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை விரிவாக ஆராயப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.
இதன்போது இலங்கை அரசாங்கம் ஜெனீவாத் தீர்மானத்திற்கு அமைய காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக அமைத்துள்ள காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து மனித உரிமைகளை பாதுகாப்ப தற்காகவும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் பொறப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளையும் முன்னிலைப்படுத்தவும் தீர்மானித்துள்ளது