புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

டிஎன்பிஎல்: முதல் அரையிறுதியில் திண்டுக்கல்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
அணிகள் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருநெல்வேயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.
லீக் சுற்றில் திண்டுக்கல் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றதோடு, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. தூத்துக்குடி அணி 4 ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
லீக் சுற்றில் சூப்பர் ஓவர் முறையில் தூத்துக்குடி அணியைத் தோற்கடித்தது திண்டுக்கல். அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது தூத்துக்குடி அணி. அதேநேரத்தில் திண்டுக்கல் அணியும் வலுவான அணியாக உள்ளது. எனவே இந்த அரையிறுதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நேரம்: மாலை 6.30

ad

ad