புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

மட்டக்களப்பில் கணவனை மனைவி வெட்டிக்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன்  செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி ந
ஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று(8.9.2016) வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த வீதியின் வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக காததான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.
வெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) என்பவரே இந்த சம்பவத்தில வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து (26) என்பவர் நஞ்சருந்திய நிலையில் காணப்பட்டுள்ளார். இவரை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்துள்ளனர்.
குறித்த வெள்ளத்தம்பி மகேஸ்வரனின் சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கொத்தியபுரத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடமாகின்றது. இவர்கள் குறித்த நொச்சிமுனைக் கிராமத்தில் வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், இவர்களிருவருக்கும் குழந்தைகள் இல்லையெனவும், இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு இடம் பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கனவனை மனைவி வெட்டி கொலை செய்திருக்கலாமெனவும் கனவனை கொலை செய்து விட்டு மனைவி நஞ்சருந்தியிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களின் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிக்கும் சத்தம் கேட்கும் எனவும் வழமைபோன்று இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தடயவியல் அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற் கொண்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ad

ad