யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அறிவுத் திருக்கோயில்அமை க்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், குருஜி வேதாந்திரி மகரிஷி 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்த பயனின் விளைவாக காயகல்பம், உடற்பயிற்சி, தியானம், அகத்தாய்வு பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'மனவளக்கலை யோகா' எனும் அருங்கலை உலகிற்கு அருளப்பட்டது.
இவ் அருங்கலையினை மேம்படுத்தும் முகமாக இவ் அறிவுத்திருக்கோயிலானது அமைக்கப்பட்டது. இவ் அறிவுத் திருக்கோயிலின் அங்குரார்ப்பண வைபவம் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தின் தலைவர் சி.முருகானந்தவேல் தெரிவித்துள்ளார்.