புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2016

இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் …

இணுவில் பகுதியில் நேற்றைய தினம்  தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கான பெயர்ப்பலகையை பொருத்த முயன்றவர்கள் மீது
  மின்சாரம் தாக்கிய நிலையில் மூவர் யாழ். போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கக்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த சயோடின் , வயது 21 , விந்துயன் , வயது 22 , சதீஸ்வரன் , வயது 32 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது ,
இணுவில் பகுதியில் காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்படும்    தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கான பெயர்ப்பலகையை கல்வி நிலையம் அமைந்துள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல்ப் பகுதியில்  பொருத்த முயன்றள்ளனர்.
இவ்வாறு பொருத்த முயன்ற பகுதியில் மிக அண்மையாகவே உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்கின்றன. அவ்வாறு பொருத்த முயன்றவர்கள் மீது  மின்சாரம் தாக்கியது.
இந்நிலையில் இணுவில் மருதனார்மடம் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில் தடை ஏற்பட்டமையினால் உயிராபத்து இன்றித் தப்பினர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட   மூவரும் உடனடியாக  யாழ். போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கக்பட்டுள்ளனர்.

ad

ad