புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

கிளிநொச்சி சந்தை தீ விபத்து : பின் போர்க்கால தமிழர் பொருண்மிய மையத்தின் அழிவு


கிளிநொச்சி பொது சந்தை நேற்று எரிந்து வானில் பரவிய புகை மண்டலத்தை இணையத்தில் பார்த்தபோது
முள்ளிவாய்க்காலில் இருந்து 2009 மே 18 அன்று மேலெழும்பிய புகைமண்டலத்தை நினைவூட்டியது.
ஏனென்றால் முள்ளிவாய்க்கால் என்பது இனஅழிப்பின் குறியீடு. பேரழிவை சந்தித்து இனஅழிப்பிலிருந்து தம்மை சிறிது சிறிதாக மீட்டெடுக்க - தக்கவைக்க போராடும் தமிழர்களின் பொருண்மிய மையத்தின் ஒரு குறியீடுதான் 'கிளிநொச்சி பொதுசந்தை'.
இத்கயை ஒரு குறியீட்டு பரிமாணத்தை கொண்ட கிளிநொச்சி சந்தை எரிந்து போனதை ஒரு செய்தியாக மட்டும் கடந்து போக நம்மில் பலர் முற்படுவது உண்மையிலேயே துயரமானது. இதை புரிந்து கொள்ள நாம் முள்ளிவாய்க்கால் காலத்திற்கு மீள பயணப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஒரு ஈழத்தமிழ் உயிரியை தனிமனித உயிரியாகவும் சமுகமாகவும் இரு வேறு தளங்களில் பாதித்திருக்கிறது. இந்தப் பாதிப்பு வெளிப்படையாக அரசியல்சார்ந்தது போல் தோற்றமளித்தாலும் உண்மை அதுவல்ல. அது சமுகஇ பண்பாட்டுஇ உளவியல்இ பொருளாதாரஇ வாழ்வியல் என்று பன்மைத்தன்மையைக் கொண்டது. தனியாகவும் சமூகமாகவும் எவ்வாறு இந்த பாதிப்பின் தொடர்ச்சி இருக்கின்றது என்பது நீண்ட ஆய்வுக்குரியது.
இந்த பாதிப்புக்களை தனித்தனியாக நாம் கண்டறிவதும் அதிலிருந்து உடனடியாக மீள்வதுமே எமது உடனடித் தேவையாக இருக்கிறது. அரசியல் ரீதியாக எம்மைத் திடப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் மேற்படி சிக்கல்களிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். எமது அரசியலின் அடிப்படை இதுதான் என்பதே இதன் மறுவளமான உண்மை.
நாம் நீண்ட காலங்களாக தொடர்ந்து குறிப்பிடுவது போல் முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம்இ இனம்இ மொழி சார்ந்து சமூகஇ பண்பாட்டுஇ உளவியல்இ பொருளாதாரஇ வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.
இது சாதாரணமானதல்ல. இந்த பேரவலத்தை எதிர் கொண்டு எஞ்சியிருக்கும் நாம் இதன் விளைவை குறைந்தது மூன்று தலைமுறைக்காவது அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எமது ஆய்வின் முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில்தான் பூமிப் பந்தின் எந்த மூலையில் இருந்தாலும் அரசியலுக்கும் அப்பால் சாதாரண மனிதர்களாக எமது மீதி வாழ்வை கழிப்பதற்கே அல்லற்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
ஒரு சமூகத்தை நிலம்இ இனம்இ மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூகஇ பண்பாட்டுஇ உளவியல்இ பொருளாதாரஇ வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பது தான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது. எனவே நாம் எமது அடுத்த கட்ட அரசியல் என்னவென்பது குறித்து குடுமிச் சண்டை போடுவதை நிறுத்தி எமது சமூகஇ பண்பாட்டுஇ உளவியல்இ பொருளாதாரஇ வாழ்வியல் ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது.
இந்த இடத்தில்தான் தமிழர்களின் பொருளாதாரம் என்ற அடிப்படை வாழ்வாதார சிக்கல் பின் முள்ளிவாய்க்கால் சூழலில் ஒரு கருத்தியல் பரிமாணத்தை எடுக்கிறது.
பின் முள்ளிவாய்க்கால் சூழலில் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் பண்பாட்டிற்குமிடையிலான உறவுகளை – தொடர்புகளை மையப்படுத்திய எமது ஆய்வு ஒன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியலை இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் முன்வைத்து ஆய்வின் முடிவாக எமக்கு கிடைத்தவை அதிர்ச்சியூட்டக்கூடியவை மட்டுமல்ல அவை ஒரு ஊழிக்காலத்தையும் நினைவுபடுத்துகின்றன.
பொருளாதாரம் (Economics)) என்பது ஒற்றைத் தத்துவம் கிடையாது. அது பல கூறுகளை உள்ளடக்குவதனூடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நிதி – பணம் (Finance)) இருக்கிறது. இந்த சிறு அலகை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் சந்திக்கும் சவால்களையும் பாதிப்புக்களையும் நாம் உணர்ந்தாலே கிளிநொச்சி சந்தை எரிப்பின் முக்கியத்துவத்தை கணிப்பிட முடியும்.
நாம் ஏறத்தாழ 25 வருடங்களாக “தமிழீழம்” என்ற ஒரு நிழல் - நிகர் அரசின் குடிமக்களாக இருந்தோம். இந்த நிழல் -நிகர் அரசின் ஆட்சியாளர்களான விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ இந்த அரசின் பங்காளிகளாகவே இருந்தார்கள்.
ஒரு அரசிற்குரிய (நிதிஇ நீதிஇ நிர்வாகம்இ காவல்துறைஇ இராணுவம் இன்ன பிற..) அனைத்து கட்டமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை செயற்பட்டுக் கொண்டேயிருந்தன. இந்த நிழல் அரசின் அடிப்படையில் தான் புலத்தில் கூட தமிழர்களின் வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருந்தது.
இங்கு புலத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ இந்த கட்டமைப்புக்குள் சிக்கியவர்களாகவே இருந்தார்கள். எனவே எமது பொருளாதாரம் சார்ந்த வாழ்வும் உழைப்பும் நிதி சேகரிப்பும் பங்கீடும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறீலங்கா என்ற அரசாங்கத்தை மையப்படுத்தி இருக்கவில்லை. அதிலிருந்து விலத்தியே இதுவரை காலமும் இருந்து வந்தது. புலிகளே இதன் மையமாக இருந்தார்கள். அங்கீகரிக்கப்படாத ஒரு தேசம் என்ற வகையில் உலக சட்ட ஒழுங்குகளுக்குள் – வரையறைக்குள் உட்பட்டும் உட்படாமலும் இந்த பிணைப்பும் தொடர்பும் இருந்தது.
சில பேருக்கு உண்மை இன்னும் உறைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூலம் ஒரு நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு அங்கீகாரத்துடன் இயங்கவில்லை என்பதைத் தவிர மற்றபடி அது ஒரு தனித் தேசம். நாம் அந்த தேசத்தை அடையாளப்படுத்தும் குடிமக்கள்.
புலிகள் பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினார்கள்இ பணயக்கைதியாக தடுத்து வைத்திருந்தார்கள் என்ற கோசங்களையெல்லாம் ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டு பார்த்தாலும் கூட நாம் அத்தகைய ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு மக்கள் சமூகம். எனவே எமது வாழ்வு அந்த தேச வரையறைக்குள் தான் கட்டமைக்கப்பட்டிருந்ததேயொழிய சிறீலங்கா என்ற தேசத்திற்குரிய எந்த வரையறையையும் கொண்டிருக்கவில்லை. எமது இனப் பிரச்சினையின் அடித்தளமே இதுதான்.
திடீரென்று ஒரு தேசத்தின் நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்படும் போது அந்த நாட்டு குடிமக்கள் என்ன செய்வார்கள்? பதில் குழப்பமானது. இன்று நாம் அதைத்தான் சந்திக்கிறோம்.
பொருளாதாரத்தின் ஒரு கூறான நிதிவளம் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே அதை மட்டும் பேசுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து ஒவ்வொரு ஈழத்தமிழனும் பெரும் கடன்காரனாக்கப் பட்டிருக்கிறான். இன்று நாம் உணராமல் இருக்கும் பெரும் உண்மை இது. வெகு சீக்கிரத்தில் அதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர வேண்டியிருக்கும்.
பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு என்பது பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பிறகு இச் சுழற்சி ஈழத்தமிழர்களிறகிடையே தடைப்பட்டிருக்கிறது. இதை வெளியாக உணரமுடியாது. ஆனால் உடனடியாக உணரப்பட வேண்டியதும் மிக முக்கியமானதுமான அம்சம் இது.
நாம் வன்னிப் போரிலிருந்து பார்க்காமல் புரிந்துணர்வு உடன்படிக்கை முறிவடைந்து போர் தொடங்குவதற்கு முன்புவரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு கிழக்கு நிலப்பரப்பு மீதான புலிகளின் நிர்வாக ஆளுமை எல்லைகளை கவனத்தில் கொண்டே மேற்படி அம்சத்தை ஆராய வேண்டும்.
அவ்வளவு நிலப்பரப்பு மீதும் புலிகள் செலுத்திய ஆளுகைக்குட்பட்டே தாயக மக்களும் சரி புலத்து மக்களும் சரி தமது பொருளாதாரத்தை பேணினார்கள். புலிகள் நிலங்களை இழக்கத் தொடங்க மறுவளமாக நாம் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கிறோம் என்பதை அப்போது யாருமே உணரவில்லை. இப்போதுகூட அது உணரப்பட்டது மாதிரி தெரியவில்லை. புலிகளின் நில இழப்பு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தவுடன் நாம் பொருளாதார ரீதியாக முழுவதுமாக முடக்கப்பட்டு விட்டோம்.
ஒரு அரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு இல்லாது போய்விட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் வாழும் நாடுகளை மனதில் நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள்இ விபரீதம் புரியும். எமக்கு நடந்திருப்பது இதுதான். புலிகள் – புலிகளின் நிழல் அரசு – தாயக மக்கள் – புலம் பெயர் மக்கள் என்ற இந்த வலைப் பின்னல் போராட்ட ஆதரவு சார்ந்தும் குடும்ப உறவுகள் சார்ந்தும் ஒரு பொருளாதார – பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீட்டை கொண்டிருந்தது. தற்போது அது தகர்ந்திருக்கிறது.
நாம் 2009 யூன் மாதமே சில கேள்விகளை இந்த தமிழர் பொருண்மியத்தை முன்வைத்து எழுப்பியிருந்தோம். அவை என்னவென்றால், 'தாயகத்தில் பெரும் போரை முன்னெடுத்து எமது அசையா சொத்துக்களை நிர்மூலம் செய்துவிட்டது சிங்கள அரசு. புலிகளின் சொத்துக்கள் என்ற போர்வையில் மக்களின் அசையும் சொத்துக்களை சிங்கள அரசு கபளீகரம் செய்யத் தொடங்கிவிட்டது. போதாதற்கு அதே பாணியில் புலத்தில் இருக்கும் மக்களின் சொத்துக்களை குறிவைக்கவும் தொடங்கிவிட்டது. இது ஒரு பக்கப் பிரச்சினை. மறுபக்கம் மக்கள் பெரும் போருக்கு முகம் கொடுத்து அழிவைச் சந்திதித்து முட்கம்பிக்குள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதால் தமது தொழிலையும் அதற்கான எத்தனங்களையும் இழந்து விட்டார்கள்.
இவர்களை யார் பராமரிப்பது? போரில் தொழில் புரியக்கூடிய உடல்வலுவுள்ளவர்களை பல குடும்பங்கள் இழந்திருப்பதால் நிரந்தரமாகவே யாரிலும் தங்கியிருக்க வேண்டிய நிலையில் பலர் இருக்கிறார்கள். இவர்களை யார் பராமரிப்பது? புலிகளின் நிர்வாகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பணி புரிந்து மாத வருவாயை ஈட்டிக்கொண்டிருந்தார்கள்.
இனி இவர்களின் நிலையும் வேலைவாய்ப்பும் எத்தகையது? 15இ000 போராளிகள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. விடுதலைப்போரில் ஈடுபட்டதால் தமது கல்வியைஇ தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்கள் இவர்கள். இவர்களின் எதிர்காலமும் வேலைவாய்ப்பும் எத்தகையது?.'
இப்படி எண்ணற்ற கேள்விகள் அரசியலுக்கும் அப்பால் எமது நிதிப்பலத்துடன் தொடர்புபட்டது. ஆனால் இவற்றை ஈடுசெய்யக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோமா? பதில் கசப்பானது. புலிகளின் ஆட்சியை மையப்படுத்திய எமது பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு முடிவுக்கு வந்திருக்கும் தருணத்தில் மேற்படி கேள்விகளின் யதார்த்தம் எம்மைப் பேயாய் அறைகிறது.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இன்னொரு போர் குறித்தோ அல்லது ஈழத்தமிழர்களுக்கான புதிய அரசியல் கட்டமைப்பு குறித்தோ பேச பலர் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தையே ஈழத்தமிழர்களின் நிரந்தரத் தோல்வியாகவும் அடிபணிவு அரசியலாகவும் கட்டமைக்க வேறு சிலர் முற்படுகிறார்கள். இதுவே இன்றைய ஈழ அரசியலின் யதார்த்தம்.
புலிகளின் போராட்டத்தின் – நிழல் அரசின் பொருளாதார மையமாக செயற்பட்டவர்கள் புலம்பெயர் தமிழர்கள். இதை ஒரு மையத்தில் குவித்து வைத்து விளக்கம் செய்ய முடியாது. பல கோணத்தில் பல கட்டங்களாக பல பரிமாணமங்களில் விளக்கம் செய்யப்பட வேண்டியது இது.
ஒரு நாட்டிற்குரிய அன்னிய செலாவணிஇ தனிநபர் வருமானம்இ பொருளாதார சுட்டெண் என்று இன்ன பிற பொருண்மிய சொல்லாடல்களினூடாக இதை தெளிவாக விளக்கம் செய்யலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பிரச்சினையை மக்களின் மொழியிலேயே விளக்கம் செய்வதுதான் பொருத்தமானது. அவர்களின் வசதிக்காகச் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறோம்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு சிறீலங்காவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் புலிகள் குறித்துப் பேசுவதும் அவர்களுடனான தொடர்பைப் பகிரங்கப்படுத்துவதும் ஆபத்தான போக்காக அறியப்படுகிறது. இப் புற யதார்த்தத்தில் புலிகளை மையப்படுத்திய நிதிப்புழக்கம் குறித்து பேசுவது பல சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களை கொண்டு போய்ச் சேர்க்கும்.
தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் தடைசெய்யப்பட்ட சொத்துக்கள் உட்பட தாயகத்தில் மக்களின் செயற்பாட்டிற்கென – போராட்டத்திற்கென அனுப்பப்பட்ட புலம் பெயர் மக்களின் எந்த நிதியும் மீள்சுழற்சிக்குட்படாதவையாக திரும்ப முடியாத இடத்திற்கு சென்று விட்டன. தனிப்பட்ட தேவைகளுக்காக – தொழில் சார் உதவிகளுக்காக என்று தமது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு நணபர்களுக்கு என்று புலம் பெயர் உறவுகளினால் அனுபப்பட்ட நிதிமூலங்களும் கடந்த போரில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.
போதாதற்கு தற்போது போரில் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு நணபர்களுக்கு உதவி செய்வதற்காக பெரும் தொகை பணத்தை தினமும் செலவழித்தபடி இருக்கிறார்கள். ( முகாமிலிருந்து வெளியேறுவதற்குஇ எந்தவித தொழில்வாய்ப்பும் இல்லாத – வருமானம் இல்லாதவர்களின் அன்றாட தேவைகளுக்காகஇ மருத்துவ தேவைகளுக்குஇ முகாமிலிருந்து வெளியேறியர்களை வேறு ஒரு நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு என்று அதன் செலவுப் பட்டியல் நீளம்)
முன்பு ஒருவருக்கு மேற்படி செலவுகளிற்கு நிதி உதவி தேவைப்படும்போது வேறு ஒரு ஈழத்தமிழர் ஏதேனும் ஒரு அடிப்படையில் அந்த உதவியைச் செய்யக்கூடிய நிலை இருந்தது. தற்போது அது இல்லை. ஏனெனில் இது ஒரு கூட்டுப்பிரச்சினை. ஏனெனில் ஒட்டுமொத்த இனமுமே ஏதோ ஒரு விதத்தில் மேற்படி சிக்கலிற்குள் சிக்கித் தவிக்கிறது.
இதன் அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களிடையே பணப்புழக்கமும் பணப்பங்கீடும் அறவே இல்லாமல் போய்விட்டது. வருமானம் இல்லாத ஒரு செயற்பாட்டிற்கு – அதுவும் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கணக்கு தெரியாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக வழங்க முடியாது. ஏற்கனவே பணப்புழக்கமும் பணப்பங்கீடும் இல்லாத ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களால் இது எப்படி முடியும்? முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்தியிருக்கிற சமூகத்தாக்கம் இது.
இந்த அடிப்படையில்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்லஇ அதற்கும் அப்பால் இந்தப் புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற தகவல்களை முன்பு சுட்டியிருந்தோம்.
இத்தகைய சூழலில்தான் தாயக மக்கள் தமது பொருண்மியத்தை தாமே கட்டியெழுப்ப வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இனஅழிப்பு அரசு நுட்பமாக அதற்கு பல தடைகளை விதித்து வருவதை உன்னிப்பாக அவதானித்தாலே புரியும். .
இறுதி இனஅழிப்பு நடந்த மண் வன்னி. அதன் மையமாக கிளிநொச்சியே விளங்குகிறது. புலிகள் கூட தமது தற்காலிக தலைநகராக கிளிநொச்சியையே அமைத்திருந்தார்கள். கிளிநொச்சி சந்தை என்பது சிங்கள அரசின் பொருண்மிய மையம் அல்ல -அது தமது வாழ்வைத் தக்க வைக்க போராடும் ஒரு இனத்தின் பொருண்மிய மையம்.
கடைகள் நாசமாகியதால் ஒரு சிலரது வாழ்வு பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த வன்னி மக்களும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுதொழில் மற்றும் சிறுபயிர் செய்கை என்பதுதான் தற்பேதைய வன்னி மக்களின் வாழ்வாதாரம் - பொருண்மியம்.
அது சந்தை எரிப்பினடாக நிர்மூலமாகியிருக்கிறது. வன்னி பெருநிலப்பரப்பின் பெரும் பகுதிகளிலிருந்து தமது சிறு தொழில் உற்பத்திகளை விற்பனை செய்பவர்களின் கூடாரம் அது. ஒரு கடை எரிவதென்பதன் பின்னால் பல குடும்பஙகளின் நீண்ட நாள் உழைப்பும் சேமிப்பும் அழிக்கப்பட்டிருக்கிறது.
கணவனை இறுதி இனஅழிப்புக்கு பலிகொடுத்து தனது இரு குழந்தைகளுடன் வாழும் ஒரு பெண் போராளி இன்று காலையில் கூறினார், ஒரு தையல் இயந்திரத்தின் மூலம் அவர் தைத்து அதை கிளிநொச்சி சந்தை கடையில் கொடுத்து வியாபாரம் செய்வதே அவரது வாழ்வாதாரம். அவரது பல ஆடைகள் கடையில் எரிந்துவிட்டதால் தனக்கு அந்த கடை உரிமையாளர் இழப்பீடு தரமாட்டார் என்றும் அதைக் கேட்பது அறமுமில்லைத்தானே என்று கண்கலங்குகிறார்.
எமகு;கு அது ஒரு சிறு தொகை. ஆனால் அவருக்கு அது அவரின் சேமிப்பு. அதை மீட்க அவர் இரவு பகலாக இன்னும் உழைக்க வேண்டியிருக்கும்.
அத்தோடு தமிழர்களின் பாரம்பரிய நடைமுறையான பண்டமாற்று முறையை கிளிநொச்சி சந்தை தொகுதியில் அவதானித்ததாக பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொண்டுவந்த காங்கறிகளை, சிறுதொழில் உற்பத்திகளை விற்க முடியாவிட்டாலும் கூட தமக்குள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒரு நடைமுறை இருந்திருக்கிறது. இன்னும் பசியால் மடியாத அவலம் இதன் வழிதான் தடுக்கப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
சந்தை எரிந்து போனதால் பாதிக்கப்பட்டிருப்பது இத்தகைய சிறுதொழில் முயற்சியை மையப்படுத்திய வாழ்வாதாரம்தான். இது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும், கடன் தொல்லைக்கும், குடும்ப பிணக்குகளிற்கும் தள்ளுகிறது. விளைவாக அவர்கள் ஒரு கட்டத்தில் குடும்ப உறவுகளை துண்டிக்கவோ, தற்கொலை செய்யவோ நேரிடுகிறது. இதை நாம் வழமைபோல் தட்டடையாக அணுகி செய்திகளை பரப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றும் வரையறுக்கிறோம்..
ஏனென்றால் யாருக்குமே சொந்த நிலத்தை இன்னும் விட்டுக்கொடுக்கவில்லை இனஅழிப்பு அரசு. அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களை பேணும் இனஅழிப்பு அரசின் தந்திரம்.
எமது ஈழத்து பெண்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. மே 18 ற்கு முன்பும் அதற்கு முந்திய போருக்கு முற்பட்ட காலங்களிலும் சரி வீட்டு செலவுக்கு கணவர்மாரின் கைகளை பெரும்பாலும் நம்பியிருந்தவர்கள் இல்லை.
வெளியில் ஒரு தொழிலை புரிந்தவர்கள்கூட வீட்டில் தமது நிலத்தில் குடிசைத்தொழில் என்று கூறப்படும் சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டவர்களே..
ஆடு வளர்ப்புஇ கோழி வளர்ப்புஇ பாற்பண்ணைஇ சிறு விவசாயம்இ புகையிலை உற்பத்திஇ மீன் பதனிடுதல்இ கருவாடு தயாரித்தல்இ பனைவள உற்பத்தி என்று அதன் பட்டியல் நீளம்..
எனவே எமது பெண்கள் போருக்கு பின் பிச்சை எடுக்கிறார்கள்இ பாலியல் தொழில் செய்கிறார்கள்இ மற்றவர்களின் கையை பார்த்து கொண்டு நிற்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.
நிலைமை ஓரளவிற்கு சிக்கலானதுதான். ஆனால் அதற்கு காரணம் இன அழிப்பு அரசே தவிர வேறு யாருமல்ல. அவர்களை அவர்கள் நிலத்தில் வாழ விட்டாலே போதும் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
அந்த நிலத்தில் தமக்கு தெரிந்த சிறு தொழில்களை - பரம்பரையாக செய்து வரும் தொழில் முயற்சிகளை செய்து தம்மை பாதுகாத்து கொள்வார்கள். ஆயதம் தூக்கி போராடியவர்களுக்கு தொழில் செய்யத் தெரியாதா என்ன?
இது தான் இன அழிப்பு உத்தி.. கடலில் இருந்த மீனை பிடித்து எல்லாம் தண்ணீர்தானே என்று குளத்தில் விட்டால் என்ன நடக்கும்? எமது மக்களுக்கும் நடப்பது அதுதான்..
அவர்கள் தமது பரம்பரை தொழிலை இழந்து ஊர் என்ற அடிப்படையில் ஒன்றுபடும் தோழமையை இழந்து குடும்ப நட்புகளில் இருந்து துண்டாகி வேறாக்கப்பட்டு வாழ்வை மட்டுமல்ல அதற்கான உறுதியையும் உளவியலையும் இழந்து நிற்கிறார்கள்..
இது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இனப்படுகொலை அரசின் நுண்மையான இன அழிப்பு உத்தி.
எனவே எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்கு பிறகு அந்த மக்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம். அவர்களே உழைத்து உண்பார்கள். ஆனால் நமது அரசியல்வாதிகள் இதைக் கணக்கிலெடுப்பதாகவே தெரியவில்லை.
தற்போது கிளிநொச்சி சந்தை எரிந்து போனதனூடாக பாதிக்கப்பட்டது எமது மக்கள் மட்டுமல்ல - பின் போர்க்கால சூழலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடும் ஒரு இனத்தின் பொருண்மியக் கட்டமைப்பும்தான்.பரணி நன்றி 

ad

ad