புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!



இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஜபக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்ததாக அவர் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது 3 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர்.

கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு இளம் பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் நாமல் ‘செக்ஸ்’ உல்லாசம் அனுபவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது.  அதை தொடர்ந்து அந்த ஓட்டல்களுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதம் ஒன்றுக்கு 4 நாட்கள் ஓட்டல்களுக்கு சென்று பல பெண்களுடன் நாமல் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கண்டி நீலப்படை அணியின் அதிகாரியும் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 செக்ஸ் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

ad

ad