புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

சுவிஸில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடி கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த 1,00,000 பிராங்மேலான பணத்தை அள்ளிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சொலூதுர்ன் மாகாணத்தில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம் உடைக்கப்பட்ட தகவல் பொலிசாருக்கு தெரிந்ததும் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

தனியார் வங்கிக்கு சொந்தமான அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையிட்டுள்ளது தெரியவந்துள்ளது.ஏ.டி.எம் மையத்தில் அப்போது 1,00,000 பிராங்கிற்கும் மேல்(1,48,93,810 இலங்கை ரூபாய்) பணம் வைக்கப்பட்டிருந்தாகவும், அவற்றை அனைத்தையும் கொள்ளையர்கள் திருடியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமில்லாமல், மையத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதில் சுமார் 10,000 பிராங்க் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது.பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கருப்பு நிறக்காரில் தப்பியுள்ளதாகவும், அவர்கள் அண்டை நாடான பிரான்ஸிற்கு தப்பியுள்ள வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது

ad

ad