புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

கொடூர விபத்து ; 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலி

தமிழ் நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட
நான்கு பேர் பலியான கொடூர விபத்து நடந்துள்ளது.
திருச்சியின் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது காசிம், இவருடைய மகன் லுக்கா ஹக்கீம், இவருடைய மனைவி ஆயிஷா சித்திக் மற்றும் மகன் இம்மரான்.
லுக்கா ஹக்கீமின் உறவினரான சபீதா பானு, கடந்த 20 நாட்களுக்கு முன் பிரசவத்திற்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து சபீதா பானுவை பார்க்க குடும்பத்துடன் சென்ற லுக்கா ஹக்கீம், மருத்துவர்களின் அனுமதியுடன் சபீதா பானுவையும் அழைத்துக் கொண்டு காரில் திருச்சி விரைந்தார்.
கொட்டாம்பட்டி அருகே சீயந்தான்பட்டி விலக்கு நால்வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்துள்ளது.
அப்போது நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
அந்த காரில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நடிகர் செந்தில்குமரன் தனது மனைவி விஜயலட்சுமி, மகன் சாய்கவின், மகள் சாய்தென்றலுடன் மதுரை நோக்கி வந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே லுக்கா ஹக்கீம் இறந்து போனார்.
பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தையும், சிறுமி சாய்தென்றல் இறந்து போயினர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் சாய்கவின் இறந்து போனார், கோர விபத்தில் நான்கு பேர் பலியான நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ad

ad