புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மூத்த பத்திரிகையாளரின் உறுதியான தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளர் மாலினி பா
ர்த்தசாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அவர் பூரண குணம் அடைந்து, விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வேண்டும் என்று ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி, தனது டிவிட்டர் பக்கத்தில், "ஒரு மகிழ்ச்சியான செய்தி, முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார், குணமடைந்து வருகிறார், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஒருவர் அவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு சொன்ன தகவல் இது" என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, 'ஜெயலலிதா நலமாக இருக்கிறார்" என்றும், "தமிழகத்துக்கு அவரது சேவை தேவை. நான் அவரது நீண்ட கால நெருங்கிய தோழி, அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ad

ad