3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 74-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
54 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த அபார வெற்றியை பெற்றது. அஜய் தாக்கூர் 14 புள்ளியும், ராகுல் சவுத்ரி 11 புள்ளியும், சுர்ஜித் 6 புள்ளியும் எடுத்தனர்.
இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை வென்று இருந்தது. தென் கொரியாவிடம் தோற்று இருந்தது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி அரை இறுதியை நெருங்கிவிட்டது.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை 18-ந்தேதி எதிர்கொள்கிறது.