புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை: டி.ராஜேந்தர்


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று இயக்குநரும், லட்சிய தி.மு.க.வின் தலைவருமான டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக டி.ராஜேந்தர் விடுத்துள்ள அறிக்கையில்,  ‘’ நாளை (திங்கட்கிழமை) எனது பிறந்தநாள் வருகிறது. ஒரு காலகட்டத்தில் என் பிறந்தநாளை பல ஏழைகளுக்கு உதவும் நாளாக கொண்டாடி வந்தேன். ஆனால் கொஞ்ச காலமாக நான் என் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. காரணம் பெரிதாக நான் ஏதும் சாதனைகள் நிகழ்த்தியதாக நினைக்கவில்லை. என்னை பெரிய அதிகாரத்தில், அந்தஸ்தில் இருப்பவனாக கருதவில்லை.

ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அன்று என்னை வந்து சந்திக்கும் லட்சிய தி.மு.க. தொண்டர்களையும், என் ரசிகர்களையும், அபிமானிகளையும் சந்திக்காமல் இருந்ததில்லை. ஆனால் இந்த முறை காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராமல் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக செயல்படும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். 

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், என் பிறந்த நாளன்று வழக்கமாக நான் சந்திக்கும் என் ரசிகர்களைக்கூட சந்திக்கும் மனநிலை எனக்கில்லை. நான் பிறந்த தஞ்சை தரணி காவிரி நீருக்காக திண்டாடும்போது மனம் பிறந்தநாள் கொண்டாடுமா? ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கப்போராடி உச்சநீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால்தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்தால் உண்மைத் தமிழர்களின் நெஞ்சம் வடிக்கிறது கண்ணீர். தமிழகத்தின் உண்மை நலவிரும்பிகள் யாராக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மக்கள் நலப்பணியாற்ற திரும்ப வேண்டுமென, எல்லாம்வல்ல இறைவனிடம் செய்வோம் பிரார்த்தனை. என்றுமே நல்லோருக்கு இறைவன்தான் துணை’’என்று கூறியிரு க்கிறார்.

ad

ad