புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

பெண்களை ஏமாற்றிய பலாத்கார பாதிரியார் கைது


நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த மிலன்சிங் (46). மாற்றுத் திறனாளியான இவர் ராமனாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த நரிப்பையூரில் பாதிரியாராக இருந்தார். இவரது மனைவி ஜீவிதா (40). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாளை சாந்தி நகரைச் சேர்ந்த காந்திமதி என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 15 பவுன் நகை மற்றும் நான்கரை லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றினார்.

சில தினங்களுக்கு முன்பு காந்திமதியைத் தொடர்பு கொண்ட பாதிரியார் மிலன்சிங் சங்கரன்கோவிலில் வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி அவரைக் காரில் ஏற்றி வந்தவர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றபோது மறுத்த காந்திமதியை சாலையில் உருட்டி விட்டுத் தப்பினார். பின்னர் அவரது புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். பிறகு போலீசார் அவரைக் கஸ்டடியில் எடுத்து விசாரித்தர்கள். அவர் பல பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி செய்ததுடன் அவர்களைப் பலாத்காரம் செய்த விபரமும் தெரிய வந்திருக்கிறது.

சங்கரன்கோவில் பக்கமுள்ள ஜெ.டி.நகரின் அன்புச் செல்வத்துக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 2 லட்சம் பெற்று மோசடி செய்தார். பின்பு அவரை தர்மபுரி அழைத்துச் சென்ற மிலன்சிங் அங்கு அவருடன் 2 ஆண்டுகள் பழகியதில் அன்பு செல்வம் கர்ப்பமானார். அதன் பிறகு அன்புச்செல்வம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த 03.01.2016 அன்று அவரைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று எரித்துக் கொலை செய்து காவேரிப்பாக்கம் நான்கு வழிச்சாலையில் உடலை வீசியுள்ளார். இதற்கு அவர் மனைவி ஜீவிதாவும் உடந்தையாகச் செயல் பட்டிருக்கிறார்.

இதனிடையே அன்புச் செல்வம் காணவில்லை என்ற தந்தை ஞானம் புகாரின்படி குருவிகுளம் போலீசார் காவேரிப்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுக்க அவர்கள் சங்கரன்கோவில் வந்து மிலன்சிங் மனைவி ஜீவதாவிடம் விசாரணை நடத்தி அவரைக் காவேரிப்பாக்கம் அழைத்துச் சென்றனர். மேலும் விசாரணையில் தர்மபுரிப் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு ஊழியம் செய்யச் சென்ற பாதிரியார் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தியது மற்றும் நெல்லை பாளை, அம்பை வி.கே.புரம் பகுதியில் உள்ள பெண்கள் என 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகத் தெரிகிறது ஒரு சிலர் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக புகாரும் செய்யவில்லை.

இது தொடர்பாக ஜெயிலில் இருக்கும் மிலன்சிங்கை மீண்டும் காவலில் எடுத்து தீர விசாரித் திட்டமிட்டுள்ளனர் போலீசார், என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

ad

ad