புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2016

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன்விபசார வழக்கில் கைது

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் சிவகீதா பிரபாகரனால் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, சிவகீதா பிரபாகரன், அவரது கணவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad