புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று
வருகிறது. இதில், 2-வது இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, நியூஸிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதை எதிர்த்து விளையாட வந்த நியூஸிலாந்து தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சில் சுருண்ட நியூஸிலாந்து,81.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஷ்வின், ஜடேஜா,ஷமி தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் - 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 2-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியா, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தர வரிசையில்,பாகிஸ்தானை முந்தி, முதலிடம் பிடித்து இருக்கிறது இந்தியா

ad

ad