கூட்டு எதிர்க் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முடிவுக்கு வரும் என அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த புதியகட்சி யாப்பு தொடர்பிலான மக்கள் கருத்துக்கள் ஒப்படைக்கும் திகதி நேற்றுடன் (15) நிறைவடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிய அரசியல் கட்சி யாப்பு உருவாக்கும் நடவடிக்கை ஏழு பேர் கொண்ட குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருவர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர், தொழிலாளர் ஒருவர், சமூகவியலாளர் ஒருவர் ஆகியோர் இந்த குழுவில் காணப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன