பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வரு மானம் கிடைத்துள்ளதாக மாநாகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தென்னிந்திய கலைஞர்களானஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்,கங்கைஅமரன்ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
குறிப்பாக மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் , மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்திய வகையில் குறித்த இடம் 3 நாட்களிற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற ஒரு நாள் நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. என்றார்.