புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2016

சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!

கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய
சதி செய்கிறார்…இப்படி எத்தனை எத்தனை பழி  பாவங்கள்..!
இடையில் அரசியலில் குழப்பம் பண்ணவும்.குழி  தோண்டவும்  எத்தனை எதிரிகள்..! சசிகலா என்கிற தனி மனுஷி எதைபற்றியும் கவலை கொள்ளவே இல்லை..!
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதுபோல முதல்வரை குணப்படுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து போவதிலேயே குறியாக இருந்தார்.
அப்போலோ மருத்துவர்கள் கூறுவது போல, சசிகலா சாப்பிடுவதே இல்லை…! தூங்குவது இல்லை..சதா முதல்வர் பற்றிய கவலை தான்..இன்னும் சொல்லப் போனால் முதல்வர் இல்லம் திரும்பும் போது சசிகலா மேடம் நோய்வாய்பட்டுவிடுவாரோ என்று அஞ்சுகிறோம்.. என்கிறார்.
மேலும் சசிகலாவிற்கு ஒருமுறை ட்ரிப்ஸ் ஏற்றுங்கள் என்றோம் அதைக்கூட மறுத்துவிட்டார்  என்கிறார்கள் மருத்துவமனை டாக்டர்கள்..!
உண்மைதான்…தனி ஒரு மனுஷியாக சசிகலாநடராஜன்  சாதித்துக் காட்டினார் தான்..!
அது தான் நட்பு..அது தான் உறவு..!

ad

ad