புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2016

ஜெ., உடல்நிலை: தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம், ராஜவேல் மரணம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த கடப்பேரி மவுனா நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சற்குணம் ( வயது 31).  இவர் அதிமுவின தீவிர தொண்டர்.  கட்சி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வு என்றாலும் தனது பங்களிப்பு முழுவதுமாக இருக்கவேண்டும் என்று நினைத்து அதன்படியே நடந்து வந்தவர்.

அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 21 நாட்களாக அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைக்கண்டு வேதனையுற்றவர்,  நேற்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் சானட்டோரியம் சிக்னலில் நின்றிருந்த டிராபிக் போலீஸ் அருகில் சென்று, ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.  

குடிபோதையில் உளறுகிறார் என்று நினைத்த போலீஸ் அவரை அலட்சியப்படுத்தவே, சட்டென்று தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மேல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  உடனே டிராபிக் போலீசும், அருகில் இருந்தவர்களும் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  40 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சற்குணம்,  மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜவேல் (வயது21), அ.தி.மு.க. தொண்டரான இவர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நாள் முதல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அவர் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த ராஜ கோபாலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad