புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2016

தேவைப்பட்டால் ஜெயலலிதா உடல் நலம் பற்றி அறிய மோடி சென்னை வருவார்: வானதி சீனிவாசன் பேட்டி

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டார். இதன்
காரணமாக கோவையில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். வேலூர் ஜெயிலில் 100-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திக்க பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நரேந்திரன் ஆகியோர் வந்தனர்.
கைதானவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவரை சந்திக்க சென்ற தலைவர்களும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாக கூறி உள்ளனர்.
ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி அறிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார்.பிரதமர் மோடியும் தேவைப்பட்டால் ஜெயலலிதா உடல்நலம் பற்றி அறிய சென்னைக்கு வருவார்.
கோவை கலவரம் தொடர்பாக சம்பவத்தில் ஈடுபடாத அப்பாவிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்கள் திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். எந்தெந்த சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்று அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொல்லப்பட்டு உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad