என் பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது
அநாகரீகமான செயல் : கமல்
கமல்ஹாசனை விட்டுப்பிரிகிறேன் என்று கவுதமி நேற்று அறிவித்தபிறகு, இதற்கு கமல் பதில் அறிக்கை வெளியிடுவார் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த வேளையில், கமல் வெளியிட்டதாக ஒரு அறிக்கை இணையத்தில் உலவியது. அது போலி அறிக்கை என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’இத்தருணத்தில் என் பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகமான செயல். நான் இச்சமயத்தில் அறிக்கை ஏதும் வெளியிடுவதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
அந்த போலி அறிக்கை: