புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2017

சசி ஆதரவு அமைச்சர்களின் அம்பலமான அந்தரங்க லீலைகள்

சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டோரை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் தீவு சொகுசு
ரிசார்ட்டில் தங்க வைக்க வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் வீட்டை மறந்து இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் இதுவரை பார்த்து இருக்காத அளவில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
தப்பி சென்று விடக் கூடாது என்பதற்காக ஒரு எம்.எல்.ஏ.,விற்கு நான்கு பேர் வீதம் அடியாட்கள் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டனர்.
அரசியல்வாதிகள் மற்றும் அடியாட்கள் என தினமும் 500க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கினர்.
எம்.எல்.ஏக்கள் தங்கிய அறையின் வாடகை ஒரு நாளைக்கு ரூ 10 ஆயிரம். ரிசார்ட்டில் உயர்தர நீச்சல் குளம், கேரள பெண்களின் ஆயில் மசாஜ், நவீன ஜிம் வசதி என நட்சத்திர ஹோட்டல் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
24 மணிநேரமும் நிதானம் இல்லாமல் இருக்கும் அளவில் உயர் தர மது வகைகள், மூன்று வேளையும் அசைவஉணவு என அனைத்தும் ஹோட்டல் நிர்வாகம் முன்பணம் வாங்காமல் செய்த வந்தது.
அங்கே தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அடியாட்கள் அட்டகாசத்தை ரிசார்ட் நிர்வாகம் தாங்க முடியாத அளவில் இருந்துள்ளது. வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்து அவர்கள் அடித்த கூத்துக்கு அளவே இல்லையாம்.
சசிகலா சிறை சென்றதால், ரிசார்ட் உரிமையாளர்கள் யாரிடம் பில் வாங்குவது என தவித்து வந்தனர். அமைச்சர்களிடம் கேட்டால் மிரட்டும் தொணியில் யாரிடம் வந்து பணம் கேட்கிறாய், தமிழ்நாட்டில் நீ ரிசார்ட் நடத்தணுமா? வேணாமா? என கேட்டுள்ளனர்.
சரி, ரிசார்ட்டை காலி செஞ்சா போதும் என்ற நிலையில், 18ம் தேதி காலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்றவுடன், எங்கே போனவர்கள் திரும்ப வந்து விடுவார்களோ என்ற பயத்தில் ரிசார்ட் மூடப்படுவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டியது நிர்வாகம்.
இந்த நிலையில், ரிசார்ட் நிர்வாகத்திற்கு பில் பாக்கி ரூ.65 லட்சம் தரவேண்டியதுள்ளது என வெளிப்படையாக கூறியது. இது குறித்து ரிசார்ட் ஊழியர் ஒருவர் கூறிய தகவல் நமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது.
ரிசார்ட் பில் தராமல் அவர்கள் ஏமாற்ற முடியாது. ரிசார்ட்டில் ஒவ்வொரு அறையிலும் சிசிடிவி கேமரா வைத்துள்ளோம் அதில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அடித்த லூட்டி, பெண்களுடன் நடத்திய அந்தரங்கம் எல்லாம் பதிவாகியுள்ளது.
பில் பாக்கி வரவில்லை என்றால் விரைவில் வலைதளங்களில் இலவசமாக அமைச்சர்கள் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு அவர்கள் மானத்தை கப்பல் ஏற்றிவிடுவோம், என்றார்.
ஆட்சிக்கு வரும் போதே இப்படி என்றால் இன்னும் நான்கு ஆண்டுகள் இவர்கள் ஆட்சி நடத்தினால் தமிழ்நாட்டில் ஒருத்துனும் தொழில் நடத்த முடியாது,என்று வேதனைப்படுகின்றனர் ரிசார்ட் ஊழியர்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170219125161#sthash.ZAL1CXhH.dpuf

ad

ad