புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2017

சசிகலா பதிலளிக்க உத்தரவு! - சிறைக்கே அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமோ, நீதிமன்ற உத்தரவுகளோ கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத்தான் வரும். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே.சசிகலாவிற்கு, சிறைக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அவருக்கு தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. 

அஇஅதிமுகவின் பொது செயலாளராக விதிகளுக்கு புறம்பாக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து  மைத்ரேயன் எம்பி தலைமையில் 11எம்பிகள் நேற்று டில்லி தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்தார்கள்.

இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பின் இந்த புகார் மனுவிற்கு வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

ஒரு கட்சி சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சிறைக்கு செல்கிறத்தே. இதற்காகத்தான் கட்சியை துவங்கி, கட்சி தலைமை அலுவலகத்திற்கு தன் வீட்டையே கொடுத்தாரா எம்.ஜி.ஆர். என்று அதிமுகவினர் வேதனைப்படுகின்றனர்.

ad

ad