மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார். இதையடுத்து, பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு சிவப்பு கொடியின் நடுவில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் படம் இடம்பெற்றுள்ளது.