அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் விவகாரங்கள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக மங்கள சமரவீர தகவல் வௌியிட்டார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் எவ் புஜ்வால்ட் மற்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புக்கள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே ஆகியோருடனேயே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும், அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது