புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2017

வித்தியா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப்பின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம் ரியால் முன்னிலையில் இன்று (08) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
மேலும், வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கின் 11ஆம் இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக கடந்த தவணையின் போது ஊர்காவற்துறை நீதவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad