புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2017

UNO மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மனித உரிமை
அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில், இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள   தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலேயே நாளை கலந்துரையாடப்பட உள்ளது.
தீர்மானம் தொடர்பிலான உத்தேச வரைவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நாளை பேசப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு மற்றும் கலப்பு நீதிமன்றம் ஆகிய விடயங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் திருத்தங்களை செய்ய இலங்கை அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முனைப்புக்கள் வெற்றியடையக்கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது

ad

ad