இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக இந்தியா தொடர்ந்து செயற்படும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் நீதித்துb றை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். ztetஇலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக இந்தியா தொடர்ந்து செயற்படும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் நீதித்துறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான லக் ஷ்மன் கதிர்காமர் நிலை யத்தில் நேற்றைய தினம் மறைந்த முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமர் நினைவு பேருரை நிகழ்த்துகையிலேயே இந்திய மத்திய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சந்து மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் சட்டம் நீதித்துறை தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்-
இலங்கையின் மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமர் சிறந்த இராஜதந்திரியாக இருந்ததுடன் இந்தியாவின் சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவின் விழுமியங்களை உணர்ந்தவராக லக் ஷ்மன் கதிர்காமர் செயற்பட்டார். இலங்கையும் இந்தியாவும் வரலாறு கலாசாரம் உள்ளிட்ட விடயங்களில் ஆழமான மற்றும் பலமான உறவை கொண்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் இலங்கையின் சுதந்திர போராட்ட வீரர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர். உலகில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுக்கு சிறந்த மாதிரியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு காணப்படுகிறது.
அண்மையில் இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு மற்றும் அபிவிருத்தி கூட்டுறவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிலையில் இங்கு முக்கிய விடயம் ஒன்றை குறிப்பிடுகின்றேன். அதாவது இந்தியாவானது இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றில் சிறந்த உண்மையான பங்காளியாக தொடர்ந்து செயற்படும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் உதவி திட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் அணுகுமுறை எம்மிடம் கிடையாது. மாறாக மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே எமது உதவிகள் மற்றும் கடனுதவிகள் அமை யும்.
கடந்த 70 வருடங்களில் இந்தியா பாரிய ஜனநாயக பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியாவானது மக்களின் உரிமையை பலப்படுத்தி அவர்களை வலுவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மக்களின் சுதந்திரமே இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும். வன்முறையை நம்பி இந்தியா செயற்படவில்லை. வன்முறைகளை பயன்படுத்தும் சக்திகள் தோல்வியை தழுவுகின்றன. இந்தியாவின் அரசியலமைப்பு இன்று உலகளவில் பேசப்படும் அரசியலமைப்பாக உள்ளது. பல்வேறு உலக நாடுகள் பெண்களுக்கான வாக்களிப்பு உரிமையை வழங்குவது குறித்து ஆராயும்போது இந்தியா பெண்களுக்கான வாக்களிப்பு உரிமையை வழங்கியது.
1965 ஆம் இலங்கை உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது. அடுத்தவருடம் 1966 ஆம் ஆண்டு இந்தியாவும் பெண் பிரதமரை உருவாக்கியது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறிச் செல்கின்றது. எனினும் சில சவால்கள் எமக்கு உள்ளன. குறிப்பாக வறுமை குறித்த சவாலை வெற்றிகொள்ள செயற்பட்டுவருகின்றோம்.
தற்போது இந்தியா டிஜிட்டல் இந்தியா வேலைத்திட்டத்தை பரவலாக முன்னெடு த்து வருகின்றது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் உலகில் முன்னணியில் இருக்கவேண்டும் என்று இந்தியா விரும் புகின்றது. டிஜிட்டல் தகவல் தொழில் நுட் பம் மக்களை பலப்படுத்துகின்றது. இலங்கையின் பல்கலைக்கழகங்களுடனும் எமது டிஜிட்டல் இந்தியா வேலைத்திட் டத்தில் இணைந்து பணியாற்ற முன்வந் துள்ளோம். அதாவது இந்தியாவின் டிஜிட் டல் இந்தியா வேலைத்திட்டத்தில் இலங் கைக்கு முழுமையான உதவியை வழங்கு வதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது என்றார்.