புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2018

சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி

வவுனியாவில் இடம்பெற்று பொதுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள்
கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி மேடையிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அண்மையில் கனடா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 'நாங்கள் அரசுடன் பேசும்போது விமர்சிக்கும் நீங்கள் விடுதலைப்புலிகள் அரசுடன் பேசும் போது தமிழீழத்தை கைவிட்டுத்தானே பேசப்போனார்கள் அவர்களை ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை' என கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பிரச்சார கூட்டத்தில் பதிலளித்த துளசி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தமிழீழத்தை கைவிட்டு பேசவில்லை, பேசிப்பயனில்லை அடித்துத்தான் பெறவேண்டுமென போராடிய நாங்கள் எம்மை பலப்படுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாகவே அரசுடன் பேசினோம் என பதிலளித்தார்.

இதை துளசி கூறியபோது மக்கள் கைகளைத்தட்டி ஆரவாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி

ad

ad