புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2018

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு! - கொலையா?

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த இளம் பெண்ணின் தாய், தந்தை இருவரும் உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் சகோதரனுடன் இருந்துள்ள குறித்த பெண்ணிடம் சகோதரன் வெளியே சென்றுவிட்டு வருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிற்குச் சென்றபோது சமையறையில் குறித்த பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.
வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த இளம் பெண்ணின் தாய், தந்தை இருவரும் உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் சகோதரனுடன் இருந்துள்ள குறித்த பெண்ணிடம் சகோதரன் வெளியே சென்றுவிட்டு வருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிற்குச் சென்றபோது சமையறையில் குறித்த பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் 5ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த 21 வயதான அர்ச்சுனன் கோகிலவதனி என்ற பெண்ணே மரணமானவராவார். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டதோடு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குறித்த சம்பவம் கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பூவரசங்குள பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad