புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2018

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. தமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் செயற்படுவதாகவும் இதனால் அவரை பதவி நீக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. தமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் செயற்படுவதாகவும் இதனால் அவரை பதவி நீக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

ad

ad