புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2018

3வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 1-2 என்று இழந்தாலும், ஒருநாள் போட்டியில் 5-1 என்று கைப்பற்றி தெ.ஆ., அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது.

இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில், முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்தன. இந்த நிலையில், இன்று கேப்டவுனில் 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியில் ரோகித் சர்மா – ஷிகர் தவான் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.ரோஹித் சர்மா 11 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இதன்பின், ஜோடி சேர்ந்த ரெய்னாவும், தவானும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ரெய்னா 43 ரன்களிலும், தவான் 47 ரன்களிலும் அவுட்டாகினர். பின்னர், களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகி வெளியானதால், தொடர்ந்து அதிக ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது.இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிர்க்கா அணி தொடக்கத்தில் ரன்களை எடுக்கத் தடுமாறியது. தொடக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் 7 ரன்களிலும், மில்லர் 24 ரன்களிலும் அவுட்டாகினார். பொறுமையாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் ஜேபி டுமினி தொடர்ந்து இரண்டாவது அரைசதத்தை பதிவுசெய்து, 55 ரன்களில் அவுட்டானார்.

ஒருகட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அந்த அணியின் அறிமுக வீரரான ஜோன்கரும், பெகரிடினும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், போட்டி மிகவும் விறுவிறுப்பானது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 165 மட்டுமே எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 கோப்பையைக் கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாகவும், புவனேஸ்வர்குமார் தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ad

ad