2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கத்திடம் எவ்வித அனுமதியும்பெற்றுக் கொள்ளாது இணையனுசரணை வழங்கியதன் விளைவினை நாளை ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கத்திடம் எவ்வித அனுமதியும்பெற்றுக் கொள்ளாது இணையனுசரணை வழங்கியதன் விளைவினை நாளை ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் விடுத்துள்ள அதிருப்தி தொடர்பில் தெளிவுபடுத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைக்கு எதிராகவே தனது பாரிய அழுத்தங்கள் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது ஏற்றுக் கொள்ள முடியாது . குறித்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமே முழுப் பொறுப்பினை யும் ஏற்று இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொய்யென்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது.உலகளாவிய ரீதியில் இடம் பெறும் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 4பரிந்துரைகள் மிக முக்கியமானதாக ஐ.நா வை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் பார்வையில் காணப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் மேற்கொண்டார்கள் என பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த குற்றங்கள் உண்மை என்று நிரூபிக்கும் முகமாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக தமது அனுசரணையினை வழங்கியதன் தாக்கத்தினை ஐ.நா. சபையில் இலங்கை எதிர்கொண்டு வருகின்றது. நாளை இடம் பெறும் கூட்டத் தொடர் இலங்கைக்கு பாரிய சவால்களை உருவாக்குவதாக காணப்படுகின்றது.