புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2018

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவு - லிங்கநாதன் போர்க்கொடி

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இந்த தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இந்த தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை தக்க வைப்பதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோருடன் நானும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தோம்.

இந்நிலையில் அப்பகுதிக்காக தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அப்பகுதியினை தக்க வைப்பதற்கு உதவியவர்கள் என்ற வகையிலும் எனக்கோ மயூரனுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அப்பகுதியில் தெரிவு செய்ய்பபட்ட தவிசாளர் உதவி தவிசாளர்களில் எமக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எச்சந்தர்ப்பதிலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad