புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2018

மாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி - வியாழேந்திரன்

வடகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக தெரிவித்த
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம்வியாழேந்திரன், கூட்டமைப்புடன் இணையும் ஏனைய கட்சிகளும் இந்த விடயத்தில்  இணைந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி  - வியாழேந்திரன்

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால், கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவும் சதாசிவம் வியாழந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – தம்பானம்வெளி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நுழைவாயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் போது, உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்,

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவை சீர்செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், பெண்களே சமூகத்தில் முன்மாதிரியாக செயற்படுவதாக தெரிவித்துள்ளாார்.

ad

ad