இன்றையதினம்(23-02-2018) யாழ்ப்பாணம் குருநகர் பிரதேச வைத்தியசாலை கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றுப்போது இவ்வாறு தெரிவித்தாா்.
இவ்வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களை கவனிப்பதற்காக இரண்டு நிரந்தர வைத்தியர்கள் உட்பட 15ற்கு மேற்பட்ட அனைத்துத்தர உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டது. இது ஒரு ஆரோக்கியமான விடயம்.
ஆனால் நேற்றைய தினம் புளியங்குளம் பகுதியில் இதே போன்று, புனரமைப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காகச் சென்றிருந்தேன்.
அங்கு ஒரேயொரு வைத்தியர் மட்டும் முழுக்கடமைகளையும் ஆற்றவேண்டிய கட்டாய தேவை அவதானிக்கப்பட்டது.
ஒரு சிங்களப் பெண் வைத்தியர் சென்ற நான்கு வருடங்களாக அங்கு தொடர்ந்து தன்னந்தனியராய் சேவையாற்றுகின்றார். என்று குறிப்பிட்டாா்.