தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் சோரம் போய்விட்டது என்று கூறப்படுவது பாரதூரமான குற்றச் சாட்டு.
அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவ்வாறு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது-,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் சோரம் போய்விட்டது என்று கூறப்படுவது பிழையான விடயம். ஆனால், தன்னால் இயன்றதை கூட்டமைப்பு சரியாக செய்கின்றதா என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
சோரம் போனது என்பதை ஏற்க முடியாது. அரசின் ஆக்கத்துக்கு நாம் எவ்வாறு உள்ளிருந்து பங்களிப்பு செய்கின்றோமோ, அதேபோன்று கூட்டமைப்பு வெளியிலிருந்து பங்களிப்பு செய்துவருகிறது – என்றார்.