புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2018

டக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது! - சம்பந்தன் தடை

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும்
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கொழும்பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலர் ந.சிறிகாந்தா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40 சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சியாக உள்ளது. இந்தச் சபைகளில் மக்கள் விரும்பியவாறு ஆட்சி நிர்வாகங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடனேயே சபைகளின் நிர்வாகத்தை கொண்டு நடத்த முடியும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு சபைகளிலும் உள்ள நிலமைகள் இரா.சம்பந்தனுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதன் பின்னர், கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுடன் பேசுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி எந்தக் கட்சிகளுடனும் பேசுவதில்லை என்றும், ஆனால் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்க் கட்சிகளுடன் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு மாத்திரம் பேச்சு நடத்துவது என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ad

ad